லண்டனில் கொலை செய்யப்பட்ட வவுனியா பெண்ணின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வர பெற்றோர் முயற்சி!!

1020

MURDER

லண்டனில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட வவுனியா தவசிகுளத்தைச் சேர்ந்த குணராசா மயூரதியின் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற் கான முயற்சிகளை பெற்றோர் மேற்கொண்டுள்ளனர்.

7 வயதுடைய பெண் பிள்ளையொன்றின் தாயான கு.மயூரதி மேற்படிப்பை மேற்கொள்வதற்காக கடந்த 2010ம் ஆண்டு லண்டனுக்கு சென்று பிரித்தானிய குடியுரிமை பெற்றிருந்த நிலையில் தனியான வீடொன்றில் வசித்து வந்திருந்தார்.

இந் நிலையில் கடந்த 6 ம் திகதி இவரது வீட்டில் இனந்தெரியாதோரால் கொலை செய்யப்பட்ட நிலையில் லண்டன் பொலிஸார் மூலம் தகவல் இவரது பெற்றோருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து மயூரதியின் பெற்றோர் சடலத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நேற்று முன்தினம் இலங்கை வெளிவிவகார அமைச்சினை நாடியுள்ளனர்.