காதலிக்காமல் சிங்கிளாக இருந்தால் கிடைக்கும் நிம்மதி!!

625


17924498-Free-happy-elated-beach-woman-in-freedom-joy-concept-Beautiful-girl-smiling-with-arms-out-looking-up-Stock-Photo

காரணம் காதல் செய்தால், இப்படி தான் இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இருக்கும், சுதந்திரம் இருக்காது. இவை ஒவ்வொருவரின் மனதைப் பொறுத்தது. அவ்வாறு சிங்கிளாக இருப்பவர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களிடம் காதல் பற்றி கேட்டால், “முட்டாள்கள் தான் காதலில் விழுவார்கள்” என்று சொல்வார்கள்.



* சிங்கிளாக இருக்கும் போது நண்பர்கள் தான் காதலர்கள். ஏனெனில் இந்த நேரத்தில் நமது சந்தோஷம் மற்றும் துக்கத்தை பகிர்ந்து கொள்பவர்கள் நண்பர்கள் தான். அத்தகையவர்களுடன் எப்போது வேண்டுமானாலும் சினிமாவிற்கு போகலாம். அதுவும் உயிர் தோழனாகவோ அல்லது தோழியாகவோ அல்லது நண்பர் கூட்டத்துடனோ இருக்கலாம். இதுவே காதலன்/காதலி இருந்தால், நண்பர்களுடன் நிம்மதியாக நேரத்தை செலவழிக்கவே முடியாது. அடிக்கடி போன் வந்து டென்சன் இருந்து கொண்டே இருக்கும்.

* எந்த ஒரு பாய் ப்ரெண்ட் அல்லது கேர்ள் ப்ரெண்ட் இல்லையென்றால், சொந்தம் கொண்டாட யாரும் இருக்கமாட்டார்கள். ஆகவே தனியாக இருப்பதால், எந்த ஒரு முடிவு எடுக்கும் போதும் நீங்களே ராஜா, ராணி. உங்களுக்கு மனதில் தோன்றுவதை செய்ய யாரிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.



* காதலிப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள், அவர்கள் காதலன்/காதலியை ஷாப்பிங் அழைத்துச் செல்லும் போது, எவ்வளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. அதிலும் பிடிக்கவில்லை என்று சொன்னாலும், மற்றவருக்குப் பிடித்தால் வாங்கிக் கொடுக்க வேண்டும். அவ்வாறு வாங்கி தராவிட்டால், சிறிய சண்டை ஏற்படும். என்ன கொடுமை சரவணா இது, இந்த மாதிரியான சண்டையெல்லாம் தேவையா? ஆனால் அதுவே சிங்கிளாக இருந்தால், அந்த பணத்தை வைத்து, எத்தனை விருப்பமானதை மட்டும் வாங்கி மகிழலாம். பணமும் மிச்சமாகும்.



* முக்கியமாக யாரை வேண்டுமானாலும் சைட் அடிக்கலாம். காதலித்தால், அந்த உரிமை போய்விடும். எப்படியெனில் நீங்கள் சைட் அடிக்கும் போது, உங்கள் துணை பார்த்துவிட்டால், பிறகு அவ்வளவு தான். * மன நிம்மதியுடன் எந்த ஒரு விளையாட்டையும், நண்பர்களுடன் சந்தோஷமாக விளையாடலாம். ஆனால் காதலித்துவிட்டால், எப்போது பார்த்தாலும் போன் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். பாருங்கப்பா, ஒரு விளையாட்டை கூட நிம்மதியா விளையாட முடியலைன்னா எப்படிப்பா முடியும்?