வீடு புகுந்து 30 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த பொலிஸ்காரர்கள்..!

499

rape

இந்திய உத்தர பிரதேசத்தில் 30 வயது பெண்ணை 2 பொலீசார் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் காகெரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் வீட்டுக்குள் கான்ஸ்டபிள்கள் தீபக் ரதி மற்றும் விகாஸ் சவுத்ரி ஆகியோர் புகுந்துள்ளனர்.

அவர்கள் அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்துவிட்டு வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து யாரிடமாவது தெரிவித்தால் உன்னை கொன்று விடுவோம் என்றும் அவர்கள் அப்பெண்ணை மிரட்டியுள்ளனர்.

அவர்களின் மிரட்டலையும் தாண்டி அப்பெண் பொலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் அந்த 2 பொலீசார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த 2 பொலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி கிராமத்தினர் மறியலில் ஈடுபட்டனர்.