திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் தங்கபுரம் பகுதியில் ஒன்றரை வயது குழந்தையொன்று கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் நேற்று (29.05) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆண் குழந்தையொன்றின் சடலமே கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
சடலம் தற்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகைளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






