வெள்ளவத்தையில் ரயில் மோதி முதியவர் பலி!!

1020

Rain Accident

வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த நபர் ஒருவர் புகையிரதம் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.

நபர் புகையிரதத்தினால் தூக்கி எறியப்பட்டுள்ளார் என்று பொலிஸார்சந்தேகிக்கின்றனர்.

முதியவர் ஒருவரே இவ்வாறு உயிழந்துள்ளார் எனவும்,நபர் குறித்து தகவல்கள்இன்னும் அடையாளப்படுத்தப் படவில்லை என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.