அவுஸ்ரேலியா நாட்டில் இரவு நேரத்தில் பெண் ஒருவர் குளத்தில் குளிக்க சென்றபோது முதலைக்கு இரையாகி பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குயின்ஸ்லேண்ட்டில் உள்ள Thornton என்ற கடற்கரை ஓரம் தேசிய பூங்கா ஒன்று அமைந்துள்ளது.
இந்த பூங்காவில் உள்ள குளம் ஒன்றில் எண்ணற்ற முதலைகள் வசித்து வருவதால், இதனைசுற்றி எச்சரிக்கை பலகைகள் பல வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், நேற்று இரவு 10 மணியளவில் பெயர் வெளியிடப்படாத 46 மற்றும் 47 வயதுடைய இரு பெண்கள் இந்த குளத்தில் குளிக்க சென்றுள்ளனர்.
அப்போது, திடீரென அங்கு வந்த ராட்சதமுதலை ஒன்று 46 வயதான பெண்ணை கடித்து இழுத்துச் சென்றுள்ளது. ’என்னை முதலை ஒன்று பிடித்து விட்டது’(Acroc has got me) என்ற கடைசி வார்த்தையை கூறிய பிறகு அப்பெண்ணிடமிருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை.பெண்ணுடன் வந்த தோழி எவ்வளவோ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.