மனைவி உடலை விமான நிலையத்திலே விட்டு விட்டு நாடு திரும்பிய பாசக்கார கணவர்!!

889

Body

அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த மனைவியின் உடலை ஐதராபாத் விமான நிலையத்திற்கு கொண்டு வந்த கணவர், உடலை அங்கேயே விட்டு விட்டு உடனே அவுஸ்திரேலியா திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அவுஸ்திரேலியா தொழில் அதிபரான Mahanth Narla என்ற நபருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது வரதட்சணையாக தங்கமும், 50 லட்சம் ரூபாயும் ரம்யாவின் பெற்றோர் வழங்கியுள்ளனர்.திருமணத்திற்கு பின் கணவருடன் ரம்யா அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வந்துள்ளார், Mahanth Narlaவிற்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட ரம்யாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரம்யா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார், பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரம்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.உடனே இறந்து போன தனது மனைவியின் உடலை ஐதராபாத் விமான நிலையம் கொண்டு வந்து சேர்த்து விட்டு Mahanth உடனே அவுஸ்திரேலியாவிற்கு திரும்பியுள்ளார். வரதட்சணை தராதால் தான் Mahanth தனது மகளை கொன்றுவிட்டதாக ரம்யாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.