பஞ்சாப்பில் ஓடும் பேருந்தில் இறங்கிய இரண்டு பெண்களில் ஒரு பெண் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
விபத்துக்குள்ளான மற்றொரு பெண் படும் காயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப மாநிலத்தின்,சங்குரிலிருந்து பாட்டியாலாவிற்கு பயணித்த பேருந்திலே குறித்த விபத்து எற்பட்டுள்ளது.மேலும், விபத்து நடக்கும் காட்சி பேருந்து நிலையத்தில் பொருத்தபட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
குறித்த பேருந்தில் பயணித்த இருவர், பேருந்தை நிறுத்தும் படி ஓட்டுநரிடம் கூறியுள்ளனர், ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் இயக்க இருவரும் ஓடும் பேருந்திலிருந்து இறங்கியுள்ளனர், இதில் சோபா எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் நிண்டால் பகுதியை சேர்ந்த சோபா எனவும், விடுமுறை நாட்களை கழிக்க சங்குர் வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
காயமடைந்து மருத்துவனையில் இருக்கும் மஞ்சு தேவியின் கணவர் கூறுகையில்: ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றதே விபத்திற்கு முக்கிய காரணம் என கூறியுள்ளார்.
சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






