ஐரோப்பிய நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!!

271

EU

ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

சுற்றுலாத்தலங்கள், உணவு விடுதிகள், பொருதாளதார அங்காடிகள் மற்றும் ரயில் நிலையங்களில் இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளக்கூடும் என அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.

கோடை காலத்தினை முன்னிட்டு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வது வழக்கம். எனினும், ஐரோப்பிய நாடுகளில் அண்மைய காலங்களில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடவடிக்கையினை விரிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் ஐரோப்பிய நாடுகளில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்யும் அமெரிக்க பிரஜைகள் உள்ளிட்டவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, இந்த எச்சரிக்கையானது எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ம் திகதி வரையிலும் அமுலில் இருக்கும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.