லஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் உடுநுவர பிரதேச செயலகத்துடன் இணைந்து பணியாற்றும் கிராம சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
15,000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள குறித்த கிராம சேவை அதிகாரி முயற்சித்ததாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைப் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி கூறினார்.
பெண்ணொருவர் வௌிநாடு செல்வதற்கு தேவையான குடும்ப பிண்ணனி குறித்த சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்காக அவர் இந்த இலஞ்ச தொகையை பெற்றுக் கொள்ள முயற்சித்துள்ளார்.
அதன்படி அவருடைய வீட்டில் உள்ள அலுவலகத்தில் வைத்து அவர் குறித்த இலஞ்சப் பணத்தைப் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி கூறினார்.
சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.






