பாரிய ஹெரோயின் கடத்தல் : சிறுவன் உட்பட 16 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

251

Crime Srilanka

ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட 13 வெளிநாட்டவர் மற்றும் சிறுவர் உட்பட 16 சந்தேக நபர்களுக்கு ஜுன் 14 வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்ற அடுத்த அமர்வின்போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர்களில் ஈரானைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் அடங்கியுள்ளதாகவும், குறித்த சிறுவனை மாகொல குழந்தைகள் நன்னடத்தை மையத்தில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்களில் 10 ஈரானிய பிரஜைகள், 3 இலங்கையர், ஒரு இலங்கைப் பிரஜை, பாகிஸ்தான் பிரஜை மற்றும் சிங்கப்பூர் பிரஜை ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 30 ஆம் திகதி 110 கிலோகிராம் எடையுள்ள ஹெரொயின் போதைப்பொருளுடன் இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரின் உதவியுடன் பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.