இந்தியாவின் டெல்லிக்கு அருகே உள்ள கிராடி கிராமத்தில் கடந்த மே 28ம் திகதி 8 வயது சிறுமி ஒருவர் தனது சகோதரருடன் வீட்டிற்கு வெளியே தூங்கி கொண்டு இருந்தார்.
நள்ளிரவு 1.30 மணியளவில் மர்ம இளைஞர் ஒருவர் சிறுமியை வாயை மூடி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளார்.
பின்னர், மோசமான நிலையில் சிறுமியை அதே இடத்திலேயே விட்டு தப்பிச்சென்றுள்ளார். மிருகத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளதால் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது.
தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த வீதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமிராவில் இளைஞர் சிறுமியின் வாயை மூடி தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளது.
பாதிக்கப்படட சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்ததை தொடர்ந்து, பொலிசார் சிசிடிவி வீடியோ காட்சி உதவியுடன் குற்றவாளியை கைதுசெய்துள்ளனர்.
இனியும், இதுபோன்ற கொடூரமான மிருகங்களிடமிருந்து அப்பாவி குழந்தைகளை பாதுகாக்க, இந்தியா அரசாங்கம் ஒரு கடுமையான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்து.






