சமூக வலைத்தளங்களிலொன்றான பேஸ்புக்கையொத்த மற்றுமொரு சமூக வலைத்தளமொன்று வட கொரியாவினால் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த வலைத்தளத்தை டக்மடோர் என்னும் நபரொருவரே முதன் முதலில் இனங்கண்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த வலைத்தளமானது இனங்காணப்பட்ட மறு தினமே நிறுத்தப்பட்டுள்ளதுடன் அதனுள் உட்பிரவேசிப்பதற்கும் அதனை இயக்குவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த இவ்வலைத்தளத்திற்கும் வட கொரிய நிறுவனத்திற்குமிடையே நெருங்கிய தொடர்பிருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.