காட்டு யானை தாக்கியதில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் 6 வயது சிறுமி பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.
6 வயதுடைய இராசையா ரோஜினி என்ற சிறுமியே காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் சிறுமியின் தந்தை படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 9.00 மணியளவில் வவுணதீவு கற்பகக்கேணி கிராமத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.
பலியான சிறுமியின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வவுணதீவு பொலிசார் விசாரணைளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் பலர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






