நீர்க் கட்டணங்கள் உயர்த்தப்படக்கூடிய சாத்தியம்!!

331

Water

கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கையில் நீருக்கான கட்டணம் உயர்த்தப்படவில்லை என நீர் விநியோக மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


இதனால் விரைவில் நீர்க் கட்டணத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பேராதனை நீர் வழங்கல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெறுமதி சேர் வரி அதிகரிப்பும் நீர் கட்டணங்களை உயர்த்த ஓர் பிரதான ஏதுவாகும் என அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளார்.


இதேவேளை, பெறுமதி சேர் வரி அதிகரிப்பினால் நீர்க் கட்டணம் உயர்த்தப்படாது என அரசாங்கம் முன்னதாக திட்டவட்டமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.