தன்னுடன் சேர்ந்து பாலியலில் ஈடுபடுமாறு மகளை பலவந்தப்படுத்திய தாய் : மகளின் துணிகர முடிவு!!

712

Paaliyal

கர்நாடகாவில் தன்னுடைய தாய், அவருடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு பலவந்தப்படுத்தி வருவதாக 16 வயது சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தூர் தாலுகாவின் கேஜ்ஜலகேரே பகுதியில் வசித்து வருபவர் நாகாமா, இவரின் கணவர் எட்டு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு தப்பி ஓடியுள்ளார், நாகாமாவிற்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள்.

வறுமையால் இரு குழந்தைகளும் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளனர். அன்றாட தேவைகளுக்காக நாகாமா பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தாயின் கேவலமான வருமானத்தில் உயிர்வாழ மறுத்த, நாகமாவின் 16 வயதான பெண் குழந்தை, 6 மாதங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி, அருகில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்து சம்பாதித்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நாகாமா மற்றொரு பாலியல் தொழிலாளியுடன் சேர்ந்து, ஆடைத் தொழிற்சாலைக்கு சென்று அவருடைய மகளை, தன்னுடன் சேர்ந்து பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு பலவந்தப்படுத்தியுள்ளார்.

ஆனால், மகளே அதற்கு மறுத்துள்ளார், இருவருக்கும் இடையே மோதல் எற்பட்டுள்ளது. இதை கண்ட பொதுமக்கள் மகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலிசார், சம்பவயிடத்திற்கு விரைந்து இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு பின்னர், மகளை பாலா மந்திராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.