14 ஆண்டுகளுக்கு முன் தொலைத்த மகனை இறக்கும் வரை தேடுவோம் : பெற்றோரின் பாசப் போராட்டம்!

527

Son missing

ரூபா, தாரா மோடி குல்பர்க் சமூகத்தில் வாழும் ஒரு பார்சி ஜோடி, கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கோத்ரா கலவரத்தின் போது தங்கள் குழந்தை அசாரை இழந்ததுள்ளனர்.

கலவரத்தில் அசார் காணமல் போகும் போது அவருக்கு வயது 14, சம்பவம் நடந்து 14 ஆண்டுகள் கழித்தும், இதுவரை அசாரை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. எனினும் சட்டத்தின் படி குறிப்பிட்ட ஆண்டுகளில் காணமல் போனோர் கிடைக்காத பட்சத்தில் அவர்கள் இறந்துவிட்டதாக கருத வேண்டும்.

ஆனால், அசாரின் பெற்றோர் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பிக்கை வைத்துள்ளனர், மேலும், விருதுபெற்ற பர்ஜானியா என்னும் இந்தி படத்தை உத்வேகமாக வைத்து, நம்பிக்கை இழக்காமல் தனது மகனை தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அசாரின் தாய் ரூபா மோடி கூறுகையில், எப்பொழுதெல்லாம் என் செல் போனுக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்பு வருகின்றதோ, அப்பொழுது எனக்கு ஒரு நம்பிக்கை வரும், யாரோ என் மகனை குறித்து தகவல் தர அழைக்கின்றார்கள் என எண்ணுவேன்.

பர்ஜானியா படத்தில்,ஒரு காணமல் போன பையன் குறித்த போஸ்டரில், தொடர்புகொள்ள செல் போன் எண் கொடுத்திருப்பர்கள், பல பேர் குறித்த எண்ணுக்கு அழைத்து, அவர்களின் மகனை கண்டதாக தகவல் தெரிவிப்பார்கள், அது ஒரு நம்பிக்கையை எற்படுத்தும்.

சமீபத்தில், கேரளா மற்றும் டெல்லியில் இருந்து சிலர் அழைப்பு விடுத்து அசாரை போல் ஒருவரை கண்டதாக தகவல் தெரிவித்தனர், அது எங்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது. எங்கள் மகன் கிடைக்கும் நாள் வரை, எங்களின் தேடுதல் தொடரும், இல்லையெனில் எங்கள் இறுதிமூச்சி இருக்கும் வரை தேடுவோம் என ரூபா மோடி கூறியுள்ளார்.