அகதி முகாமில் 8 சிறுமிகளை சீரழித்த நபருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா?

621

Abuse

துருக்கியில் அகதிகள் முகாமில் இருந்த எட்டு சிரிய நாட்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு அந்நாட்டு நீதிமன்றம் 108 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

துருக்கி நாட்டின் தெற்கு காஜியண்டெப் மாகாணத்திலுள்ள நிஜிப் பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. சிரிய எல்லைப்பகுதியில் இந்த முகாம் உள்ளது. இந்த முகாமில் 10, 800 பேர் தங்கியிருந்தனர்.

இந்த முகாமில் இருந்த எட்டு சிரிய நாட்டு சிறுமிகளை அந்த முகாமில் வேலை செய்த 29 ஊழியர் எர்டல் என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளமை கண்டறியப்பட்டது.

இது தொடர்பான வழக்கு துருக்கி நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் குற்றவாளிக்கு 108 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

முன்னதாக, அரசு தரப்பு வழக்கறிஞர் 289 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வேண்டும் என்று வாதாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.