இலங்கை போக்குவரத்து சபையில் 8000 பேர் ஓய்வு பெற வாய்ப்பு!!

564

retirement-sign-3
இலங்கை போக்குவரத்து சபையில் 8000 பேர் ஓய்வு பெற வாய்ப்பு இலங்கை போக்குவரத்து சபையில் பணிபுரியும் 8000 பேர் ஓய்வு பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஓய்வானது குறித்த பணியாளர்களின் சுயவிருப்புடனே நடைபெறுவதாக இலங்கைபோக்குவரத்து சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பிரியந்த தனசிறி பாலசூரியதெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் மறு ஒழுங்கமைப்பு திட்டத்தின் கீழ் இதுநடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் தமது விருப்பின் பேரில் ஓய்வு பெற்று செல்லும் பணியாளர்களுக்கு இலங்கைபோக்குவரத்து சபையினால் இழப்பீட்டு பணம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைவான சுற்றுநிரூபம் ஒன்று போக்குவரத்து அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் குறித்த சுற்றுநிரூபத்தின் படி தன்னார்வ பணியாளர்களும், பஸ்சாரதிகள், நடத்துனர்கள், பொறியிலாளர்களும் ஓய்வு பெறும் பணியாளர் வரிசையில்உள்ளடக்கப்படவில்லை என்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் குறித்த ஓய்வுக்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 30ஆம் திகதி வரைபெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.