மனைவியை கொன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூர கணவன்!!

521

1 (53)
இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 25 வயதான நபர் ஒருவர் மது போதையில் மனைவியை அடித்து கொன்று விட்டு, பிணத்துடன் உறவு கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரதீப் சர்மா- மோனிகா ஜோடி, டெல்லியின் மேற்கு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர், பிரதீப் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார், இருவருக்கும் இடையில் பணம் காரணமாக அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடந்த மே 30ம் திகதி வீட்டின் உரிமையாளர் வாடகை பிரச்சனை காரணமாக பிரதீப்-மோனிகா தம்பதியை வீட்டை விட்டு வெளியேறும் படி கூறியுள்ளார்.

இதைதொடர்ந்து பிரதீப்- மோனிகா இடையில் கடும் சண்டை நடந்துள்ளது, அப்போது மது போதையில் இருந்த பிரதீப், மோனிகாவின் தலையை பிடித்து சுவரில் தொடர்ந்து மோதியுள்ளார், இதில் மோனிகா உயிரிழந்துள்ளார்.பின்னர் மோனிகாவின் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்த பிரதீப், பிணத்துடன் உறவு கொண்டுள்ளார்.

மறுநாள் காலையில் எழுந்த போது தான், மனைவி கொல்லப்பட்டதை உணர்ந்துள்ளார், பின்னர், மனைவியை கொன்று விட்டதாக பிரதீப் அவரது தந்தையிடம் செல்போன் மூலம் கூறி விட்டு தப்பிச்சென்றுள்ளார்.கொலை குறித்து வீட்டின் உரிமையாளர் பொலிஸிற்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், பிரதீப்பை தீவிரமாக தேடி வந்த பொலிசாருக்கு, அவர் தப்பிச் செல்ல Nangloi ரயில் நிலையத்தில் மறைந்து இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.Nangloi ரயில் நிலையத்தில் தொடரந்து இரண்டு நாட்கள் தீவர கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிசார், பிரதீப்பை கைது செய்துள்ளனர்.