படையினரின் 70 ஆயிரம் ஆவணங்கள் அழிந்து நாசம்!!

708

Kosgama

அவிசாவளை, கொஸ்கம, சாலாவ இராணுவ முகாம் ஆயுதக்கிடங்கு வெடிப்பு சம்பத்தினால், சுமார் 70ஆயிரம் இராணுவ தற்காலிக படையினரின் ஆவணங்கள் அழிந்துப்போயுள்ளன. படைத்தரப்பினர் இதனை தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆவணங்களை மீண்டும் பெறக்கூடிய வாய்ப்புக்கள் இல்லையென்றும் இராணுவத் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கை இராணுவத்தின் தற்காலிக படைவீரர்களின் தலைமையகம் சாலவ இராணுவ முகாமிலேயே அமைந்துள்ளது.