கூரான ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் படுகொலை!!

777

1 (14)
காலி-போத்தல பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட கொலை செய்யப்பட்டுள்ளார்.போத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதான இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் நேற்றைய தினம் பத்தேகம நீதவான் நீதிமன்றில் வழக்கொன்றில் ஆஜராகி மீண்டும் வீடு திரும்பிய வேளையில் அடையாளம் தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்றும் போத்தல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போத்தல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.