காகிதம் போன்று மடக்ககூடிய தொடுதிரைகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் அறிவியல் இதழில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.அதில், தென்கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை(கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப்யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூலீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி மற்றும் கைபேசிகள் ஆகியவற்றின் திரைகளை உருவாக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் OrganicLight Emitting Diode தயாரிப்பில் வெற்றி அடைந்துள்ளனர்.அதாவது தற்போதுவளைந்த திரைகளின் பயன்படுத்தக்கூடிய என்ற Indium-Tin-Oxide உலோகக் கலவைக்கு பதிலாக Graphene–யை பயன்படுத்தவுள்ளனர்.இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் செலவுகளை குறைப்பதுடன் திரைகளை 2.3 மி.மீ வரை மடக்கலாம்.மேலும் எதிர்காலத்தில் காகிதம் போல் மடக்ககூடிய திரைகள் உருவாக்குவது சாத்தியமாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.