விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா, நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் படம் ஆரம்பம். இப்படத்தின் படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி கொண்ட அஜித் ஒருவழியாக மீதிப் படத்தை முடித்துக் கொடுத்துள்ளார்.
இப்படம் குறித்து இயக்குனர் விஷ்ணுவர்தன் கூறுகையில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட இப்படத்திற்கு சமீபத்தில் தான் பெயர் சூட்டியுள்ளோம்.
இதில் அஜித் உட்பட அனைவருமே தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர்.
இப்படத்திற்காக படு பயங்கரமான சண்டைக் காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டது. அதில் அஜித் ஓடும் ஒரு காரிலிருந்து, மற்றொரு காரில் தாவுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக அஜித் விபத்தில் சிக்கியதில் வலது காலில் அடிபட்டது. ஆர்யா தான் அந்த காரை ஓட்டிச் சென்றார். இதில் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய அஜித் வலியை பொறுத்துக் கொண்டு நடித்துக் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்து வரும் அஜித், படம் முடிவடைந்த பின்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.