கானா நாட்டில் அண்மையில் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட மணப்பெண் ஒருவரின் புகைப்படங்களுக்கு இணையத்தளத்தில் கிடைத்த கிண்டல் பதிவுகளுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானாவில்(Ghana) Mzznaki Tetteh என்ற பெண்ணின் Kojo Amoah என்பவர் காதலித்து எதிர்வரும் யூன் 23ம் திகதி திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர்.
காதலி அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார். காதலன் ஒரு கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
இருவரின் திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் உற்சாகத்துடன் நிகழ்ந்துள்ளது. காதலி மற்ற பெண்களை விட அளவுக்கு அதிகமான எடையுடன் உடல் பெருத்து காணப்பட்டாலும், காதலன் அதனை பெரிதாக கருதாமல் இருவரும் அன்பாகவே பழகி வருகின்றனர்.
இந்நிலையில், தங்களது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை காதலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் உற்சாகமாக விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஒருசில விஷமிகள் மணப்பெண்ணின் உடல் தோற்றத்தை மோசமாக விமர்சித்து கிண்டல் செய்தும் பதிவிட்டு வருகின்றனர்.
ஒருவர் வெளியிட்ட பதிவில், ‘என்ன செய்வது? இதுபோன்ற தம்பதியையும் இந்த சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பது வருந்தத்தக்கது.
மணப்பெண் உடனடியாக உணவை கட்டுப்படுத்தும் பயிற்சியை எடுக்க வேண்டும். இதே உருவத்தில் மணப்பெண் திருமண உடுப்புகளை அணிந்தால் மிகவும் அறுவெறுப்பாக தான் இருக்கும். இந்த தம்பதியை பார்த்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
இதைவிட மோசமாக மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார். அதில், ‘இந்த தம்பதியை பார்த்தால் எனக்கு பொறாமையாக இல்லை. ஆனால், மணமகனின் பாதுகாப்பை நினைத்து தான் கவலைப்படுகிறேன்.
ஏனெனில், ஒரு புகைப்படத்தில் மணப்பெண்ணை தூக்க முடியாமல் மிகவும் போராடுகிறார். பாவம், அவரது எதிர்காலம் இருண்டு விடுமோ என்று தான் அச்சப்படுகிறேன்’ என அநாகரீகமாக பதிவிட்டுள்ளார்.
ஆனால், இந்த கிண்டல் பதிவுகள் அனைத்தையும் படித்துவிட்டு மணப்பெண் கூலாக ஒரு பதில் வெளியிட்டுள்ளார்.
அதில், ‘உங்களது கிண்டலான, முட்டாள்த்தனமான பதிவுகள் எங்கள் இருவரின் மகிழ்ச்சியை கெடுத்துவிடாது. நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக தான் இருக்கிறோம்.
இதே நம்பிக்கையுடன் நாங்கள் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வாழ்ந்து காட்டுவோம்.எங்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்த மற்ற நண்பர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிலளித்து கிண்டல் செய்தவர்களின் வாயை அடைத்துள்ளார்.