12 பேரை கொன்ற யானை இன்று பிடிபட்டது!!

263

Elephant

12 பேரை கொன்ற யானை ஒன்று இன்று வன ஜீவராசிகள் திணைக்களத்தினரால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளவாய – தேவகிரிகந்த பிரதேசத்தில் வைத்தே இந்த யானை பிடிபட்டுள்ளது.

குறித்த யானையானது அம்பேகமுவ, பலஹருவ, உனகந்த, வெஹரயாய, எத்திலிவௌ, சிறிபுர ஆகிய பிரதேசங்களில் பல அட்டூழியங்களை புரிந்த யானை என்றும், குறித்த பிரதேசங்களில் 12 நபர்களை கொன்ற யானை என்றும் நிலையான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் பிரதி அமைச்சின் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிடிக்கப்பட்ட யானையானது ஹொரவப்பொத்தான யானைகள் தடுப்பு முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சு வட்டாரங்கள் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.