சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம்நேற்றைய தினம் 06.06.2016 திங்கட் கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம் பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பால் அபிஷேகமும் 15 ஆம் திகதி புதன்கிழமை பகல் சிவபூசையுடன் இரவு திருமஞ்சமும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை பகல் விசேட கருட பூசையும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பெரிய சப்பரத்திருவிழாவும் மறுதினமான 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தேர்த்திருவிழாவும் 20 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தத் திருவிழாவும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை தெற்பத்திருவிழாவுடன் ஆலயத்தினது உற்சவங்கள் யாவும் நிறைவடையும்.
படங்கள் : நயினை குமரன்