மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று (07.06.2016) இரவு 11.45 அளவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவத்தில், மஸ்கெலியா பிரவுண்ஸ்வீக் தோட்டத்தை சேர்ந்த 49 வயது மதிக்கதக்க செல்வசுந்தரம் என்ற நபரே உயிரிழந்துள்ளதாக, தெரியவந்துள்ளது.
இவர் சுகயீனம் காரணமாக நேற்று மாலையே சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகட்ட நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின், பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
எதுஎவ்வாறு இருப்பினும் மரணத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.