செம்மொழி தமிழுக்கான விருதுகள் அறிவிப்பு : முழு விபரம் இதோ!!

396

Chemmozhi

சென்னை தரமணியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனம் தமிழில் சிறந்த அறிஞர்களுக்கு செம்மொழி தமிழுக்கான குடியரசு தலைவர் விருதுகளை (2013-2014) அறிவித்துள்ளது.

தொல்காப்பியர் விருது முனைவர் சோ.ந.கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது. அவர் தமிழ் இலக்கண, இலக்கிய ஆய்வுகளில் புலமை பெற்றவர். 45 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் பிற கல்வி நிறுவனங்களிலும் ஆய்வுப்பணி ஆற்றியவர். இவருக்கு இந்த விருதுடன் 5 லட்சம் வழங்கப்படுகிறது.

இளம் அறிஞர் விருது முனைவர் உல.பாலசுப்பிரமணியன், முனைவர் கலை.செழியன், முனைவர் சோ.ராஜலட்சுமி, முனைவர் த.மகாலட்சுமி, முனைவர் சவ்.பா.சாலாவாணி ஸ்ரீ ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதுகளுடன் தலா 1 லட்சம் கொடுக்கப்படுகிறது.