கல்லடி உணவகத்தில் கைகலப்பு : சந்தேகநபர் ஒருவர் கைது!!

360

kallady

மட்டக்களப்பு – கல்லடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் இருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்லடி பகுதியிலுள்ள உணவகம் ஒன்றிற்கு சென்றிருந்த ஒருவருக்கும் உணவக உரிமையாளருக்கும் இடையில் நேற்று முன்தினம் (06.06.2016) வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, மேலும் சிலரை அங்கு அழைத்துச்சென்ற வெளிநபர் உணவக உரிமையாளருடன் கைகலப்பில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது உணவக உரிமையாளரும் மற்றுமொருவரும் காயமடைந்ததுடன் உணவகத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயத்திற்குள்ளான உணவக உரிமையாளரும், மற்றைய நபரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனிடையே சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்