மகளை எச்சரிக்க முயன்ற தந்தையால் நிகழ்த்த விபரீதம்!!

255

1

வீட்டுப் பாடத்தை செய்யாது விளையாடிய 10 வயது மகளை எச்சரிப்பதில் ஈடுபட்ட தந்தையால் தவறுதலாக வீசப்பட்ட கத்தரிக்கோல் மகளின் மண்டையோட்டை ஊடுருவிய விபரீத சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினம் குறிப்பிட்ட மகள் வீட்டுப் பாடத்தை செய்யாது விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட தந்தை, அவரை விளையாட்டை நிறுத்தி பாடத்தைச் செய்யுமாறு கையை ஆட்டி எச்சரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது அவரது கையிலிருந்த 6 அங்குல நீள கத்தரிக்கோல் கையிலிருந்து தவறுதலாக வீசப்பட்டு சிறுமியின் தலையைத் தாக்கி மண்டையோட்டினூடாக ஊடுருவியுள்ளது.

இதனையடுத்து ஷங்காய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சிறுமிக்கு சிக்கலான அறுவைச்சிகிச்சையை மேற்கொண்டு அவரது தலையை ஊடுருவியிருந்த கத்தரிக்கோலை மருத்துவர்கள் அகற்றினர்.

அந்த சிறுமி உயிர் பிழைத்த போதும் அவர் பகுதியாக ஞாபகசக்தியை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்தக் கத்தரிக்கோல் சிறுமியின் மூளைக்கு செல்லும் முக்கிய குருதிக் கலனிலிருந்து மயிரிழையில் விலகிச் சென்றிருந்தமை காரணமாகவே அந்த சிறுமியால் உயிர் பிழைக்க முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

2