மரம் முறிந்து விழுந்து ஆறு வீடுகள் சேதம் – 40 பேர் பாதிப்பு!!

451

tree-falls-neighbor-noaa_08cc2aba751e05eb84de0caf0ad64147
நாவலப்பிட்டி – கெட்டபுலா கடியன்லென தோட்டத்தில் பழமைவாய்ந்த பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஆறு வீடுகள் சேதமாகியுள்ளதோடு 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (8) மாலை இடம்பெற்றுள்ளதாகவும், அதன்போது மூன்று வீடுகள் முற்றாகவும், மூன்று வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக தோட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு உயிர் சேதம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கும் தோட்ட நிர்வாகம், வீடுகளில் உள்ள பொருட்கள் முற்றாக சேதமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.அத்தோடு பாதிக்கப்பட்ட ஆறு குடும்பங்களை சேர்ந்த 40 பேர் தற்காலிகமாக தோட்ட கலாச்சார மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உதவிகளை தோட்ட நிர்வாகம் செய்து வருகின்றது.

மரம் முறிந்து விழுந்ததன் காரணமாக இப்பகுதிக்கான மின்சார துண்டிப்பு ஏற்பட்டுள்ளதோடு, திருத்த பணிகளை நாவலப்பிட்டி மின்சார சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.பழமைவாய்ந்த குறித்த மரத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் தோட்ட நிர்வாகமும், பிரதேசவாசிகளும் ஈடுபட்டுள்ளனர்.