4 மாதக்குழந்தையை ஓடும் காரில் இருந்து தூக்கியெறிந்த தந்தை: சவுதியில் பயங்கரம்!!

256

8mmH3VZRy-okttvwm_wAE0hisks
சவுதி அரேபியாவில் தந்தை ஒருவர் தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது என நினைத்து ஓடும் காரில் இருந்து வீசியெறிந்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சம்பவம் நடைபெற்ற அன்று Manama நகரில் இந்நபர் தனது மனைவி மற்றும் 4 மாதக்குழந்தையுடன் காரில் பயணித்துள்ளார்.அப்போது, இந்நபர் காரின் ஜன்னல் வழியாக குழந்தையை தூக்கி எறிந்துள்ளார்.

இதனைப்பார்த்த மனைவி என்ன செய்வதென்று தெரியாமல், காரில் இருந்து இறங்கி தனது குழந்தையை காப்பாற்ற ஓடியதில், லொறியில் அடிபட்டு உயிரிழந்துள்ளார்.இதில் கீழே விழுந்த குழந்தைக்கு அடிபட்டதில் குழந்தையும் உயிரிழந்தது, இதுதொடர்பான விசாரணையில், தனது குழந்தைக்கு பேய் பிடித்துவிட்டது எனக்கூறி, பயங்கரமாக குழந்தையை அடித்துள்ளார்.

அதன் முடிவில்தான் குழந்தையை காரின் ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார், மேலும் மனைவியும் காரில் இருந்து இறங்கிவிட்டாலும், அதனைப்பொருட்படுத்தாது சென்ற இவரை பொலிசார் பின்தொடர்ந்து சென்று விரட்டி பிடித்துள்ளனர்.இதுதொடர்பான வழக்கு மெக்காவில் நடைபெற்று வந்த நிலையில், இவருக்கு 15 ஆண்டுகள் சிறைதண்டனையும், 1,500 கசையடிகளும் வழங்கப்பட்டுள்ளன.