இராணுவத் தாக்குதலால் சிரியாவில் 15 பேர் பலி!!

520

syria

சிரியாவின் அலெப்போ நகரில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அரசுப் படையினர் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சிரியாவின் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அல்-பயான் பகுதி மருத்துவமனை அருகே இராணுவம் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் மாத்திரம் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
அல்-மர்ஜா என்ற பகுதியில் வீசப்பட்ட வெடிகுண்டுகளுக்கு 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளனர். அல்-மாதி பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.