கொஸ்கமவில் சேதமடைந்த வீடுகளுக்கு மாதம் 50,000 கொடுப்பனவு!!

689

Gosgama

கொஸ்கம – சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு, மாதாந்தம் 50,000 ரூபாவை கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, மூன்று மாதங்களுக்கு குறித்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.