‘பசுமை திருமலை’ அமைப்பின் நூல் வெளியீடு!!

580

Book

‘நிலக்கரி மின் ஆலையில் சம்பூர்’ எனும் ஆவணப்படுத்தப்பட்ட நூல் ஒன்றினை பசுமைத் திருமலை அமைப்பு வெளியிடுகின்றது. இந் நூலினை, வைத்தியர் அ.சதீஸ்குமார் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்.

இந் நூலானது 11.06.2016, சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஜெசியூட் ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் வெளியீடு செய்யப்படவுள்ளது.

இவ் வெளியீட்டில் திருமலை பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்களும், புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் என்.பிரதீபன் அவர்களும் விசேட விருந்தினர்களாக கலந்துகொள்வதுடன், மதியுரைஞர் திரு.பொ.சற்சிவானந்தம் (சிரேஸ்ட ஊடகவியலாளர்) அவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

எனவே ஆர்வமுள்ள அனைவரையும் கலந்துகொள்ளுமாறு பசுமை திருமலை அமைப்பு சார்பாக அவ் அமைப்பினுடைய தலைவர் திரு.கோபவன் அவர்கள் கேட்டுக்கொள்கின்றார்.