110 பேரைக் கொன்று குவித்த போராளிகள்!!

537

Africa

ஆபிரிக்க நாடான சோமாலியாவில் அல் கொய்தா இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புடைய அல் ஷபாப் போராளிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க சோமாலியா ராணுவ வீரர்களுடன் இணைந்து ஆப்பிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினரும் போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் தலைநகர் மொகாதிசுவில் இருந்து 300 கி.மீ தொலைவில் ஹல்கான் நகரில் ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையின் தளத்தில் அல் ஷபாப் போராளிகள் நேற்று பயங்கர தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினர் 60 பேர் கொல்லப்பட்டதாகவும் அல் ஷபாப் அமைப்பின் செய்தி தொடர்பாளர் தகவல் வெளியிட்டார். ஆனால் இது தவறான தகவல் என்று ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஜோ கிபெட் கூறுகையில், “அல் ஷபாப் போராளிகள் தாக்குதல் நடத்தியபோது எதிர் தாக்குதல் நடத்தினோம். இதில் அந்த போராளிகள் 110 பேரை கொன்று குவித்து விட்டோம். ஆபிரிக்க ஒன்றிய கூட்டுப்படையினர் 60 பேரை கொன்று விட்டதாக அவர்கள் கூறியது தவறான தகவல்” என குறிப்பிட்டார்.