நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 258 குளங்கள் சேதமடைந்துள்ளன!!

688

Kulam

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ளம் காரணமாக 258 குளங்கள் சேதமடைந்துள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வௌ்ளம் காரணமாக சுமார் 3500 ஏக்கர் வயல் நிலமும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் சுனில் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

வௌ்ளத்தினால் மணலும் அதிகளவில் அள்ளுண்டு சென்றுள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் இழப்பீடுகள் தொடர்பில் ஆராயப்படும் எனவும் கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் சுனில் வீரசிங்க குறிப்பிட்டார்.