உண்டியல் உடைத்து திருடியவரை உறங்க வைத்த நரசிம்மர் : சுவாரஷ்ய சம்பவம்!!

664

Arrested

புத்தூர், வீரவாணி நரசிம்மர் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தைத் திருடிய திருடன், அயர்ந்து உறங்கியதால் பொலிஸாரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

மோட்டார் சைக்கிளொன்றில் சென்று உண்டியலை உடைத்துத் திருடிய மேற்படி நபர், அந்த இடத்துக்குச் சற்றுத் தொலைவிலுள்ள ஆள் நடமாற்றம் அற்ற இடத்தில், தான் பயணித்த மோட்டார் சைக்கிளை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு ஆழ்ந்து நித்திரை கொண்டுள்ளார்.

வீதிரோந்தில் ஈடுபட்ட பொலிஸார், மோட்டார் சைக்கிளை அவதானித்து தேடுதல் நடத்தினர். இதன்போது சற்று ஒதுக்குப் புறமான இடத்தில் பணம் நிரம்பிய உரைப்பையுடன் தூங்கிக் கொண்டிருந்தவரை அவதானித்து அவரை விசாரணை செய்தனர்.

இதன் போது கோயில் உண்டியல் உடைத்த விடயம் தெரியவந்தது.
பண்டத்தரிப்புப் பகுதியைச் சேர்ந்த மேற்படி நபரிடமிருந்து 8 ஆயிரத்து 550 ரூபாய் உண்டியல் பணம் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்