ஆங்கிலம் கற்கச் சென்ற சிறுமியை கர்ப்பிணியாக்கிய மதகுரு!!

947

A little girl poses for photographs to illustrate the topic of child abuse in Canberra, Monday, Oct. 28, 2013. (AAP Image/Lukas Coch) NO ARCHIVING

காலி திக்குவளை பிரதேசத்தில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றின் மதகுரு ஒருவர் 15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வார நாட்களில்இந்த தேவாலயத்தில் ஆங்கில வகுப்பு நடத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்கில வகுப்புக்கு வரும் சிறுமியை தேவாலயத்தில் இருக்கும் அறை ஒன்றுக்குள் அழைத்துச் சென்று இந்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி வந்துள்ளார்.

சிறுமியின் செயற்பாடுகளில் மாற்றத்தை அவதானித்த தாய், சிறுமியை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்று சோதித்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுமி கர்ப்பம் தரித்துள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார். இதனையடுத்து தாய், திக்குவளை பொலிஸ் நிலையத்திற்கு சென்று சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளார்.

திக்குவளை மஹாவேல பிரதேசத்தில் உள்ள தேவாலயத்திற்கு பொலிஸார் சென்றிருந்த போது மதகுரு வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.