உலகின் ஏழை நாடுகளிலுள்ள மக்களுக்கு உதவும் வகையில், ஒரு இலட்சம் கோழிகளை தானமாக வழங்கத் திட்டமிட்டுள்ளார் கோடீஸ்வரர் பில் கேட்ஸ்.
கோழி விற்பனை மூலம் ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
கோழிகள் வளந்து பெருகும் போது அவை நாளடைவில் நல்ல முதலீடாக அமைந்து வருமானத்தைப் பெருக்கும் எனவும் பில் கேட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், மேற்கு ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் கோழி வளர்ப்பு என்பது 5 சதவீதமாக உள்ளது. அதனை 30 சதவீதமாக உயர்த்தி, கோழி வளர்ப்பு முறையை பெரிய அளவில் ஊக்கப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய ஆராய்ச்சிகளின்படி, 10 கோழிகள் கொண்ட ஒரு பண்ணை ஆண்டுக்கு 1000 டொலர்கள் வரை ஒரு குடும்பத்திற்கு வருவாயை ஈட்டித்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.






