காபனீர் ஓக்சைட் வாயுவை கல்லாக மாற்றினால் புவி வெப்பமாதலைக் கட்டுப்படுத்தலாம் : ஆய்வாளர்கள் நம்பிக்கை!!

663

Carbon-dioxide

காபனீர் ஓக்சைட் வாயுவை கல்லாக மாற்றுவதன் மூலம் பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என தாம் நம்புவதாக ஐஸ்லாந்தின் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘கார்ப்ஃபிக்ஸ்’ என்ற இது குறித்த பரிசோதனையை நடத்திவரும் விஞ்ஞானிகள், காபனீர் ஓக்சைட் (கரியமில வாயு) வாயுவை தண்ணீரில் கரைத்து, அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள்.

அப்போது அந்த வாயு, ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் இரசாயன மாற்றமடைந்து திடமான ஒரு பொருளாக மாறியது.

இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பதாலும், இது போன்று இரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும் இது புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்த உதவும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.