திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி!!

898

Elephant

திருகோணமலை கந்தளாய் பிரதேசத்தில் உள்ள குளத்தில் மீன்பிடிக்கச் சென்றவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று (11.06) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய எதிரிசிங்ஹ முதியன்சலாகே சிசிற என்பவரே யானைத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.