வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தின் திருவிழா திருப்பலி மற்றும் திருச்சொரூப பவனி இன்று (13.06.2016) காலை ஆலய பங்குதந்தை அருட்பணி எஸ்.சத்தியராஜ் தலைமையில் இடம்பெற்றது.
திருச்சொரூப பேரணியானது ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி ஹொரவப்பொத்தான வீதி வழியாக சென்று மறுபடியும் ஆலயத்தினை வந்தடைந்தது.
இறம்பைக்குளம் புனித அந்தோனியார் , வேப்பங்குளம் தூய சூசையப்பர் ஆலய பங்குதந்தை , அமலமரித்தியாகிகள், சபைக் குருக்கள் மற்றும் அருட் சகோதரிகள், பங்கு மக்கள், அயல் பங்கு மக்கள் என பலரும் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.