விரட்டும் ஊடகங்கள் : வேதனையில் விஜய் மல்லையா!!

1350

MUMBAI, INIDA NOVEMBER 15: Vijay Mallya, Chairman of Kingfisher Airlines at press conference to announce the results at Regency Ballroom, Hyatt Regency, Andheri (E) on November 15, 2011 in Mumbai, India. (Photo by S Kumar/Mint via Getty Images)

தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக சர்வதேச பிடியாணை பிறப்பிக்கக்கோரி சர்வதேச பொலிசாரின் உதவியை இந்திய அமலாக்க துறை நாடியுள்ளது.

இந்த நிலையில் இது குறித்து விஜய் மல்லையா நேற்று விடுத்த அறிக்கையில், வங்கி கடன் மோசடி தொடர்பாக என் மீது அமலாக்க துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவை விட்டு நான் வெளியேறும் போது எனக்கு எதிராக எந்த நோட்டீசும் அனுப்பவில்லை. பிடியாணையும் பிறப்பிக்கவில்லை.

அப்படி இருக்க கடந்த மார்ச் 2 ஆம் திகதி வெளிநாட்டுக்கு நான் தப்பி சென்றதாக இந்திய அரசும், ஊடகங்களும் குற்றம் சாட்டின.

என் மீதான வழக்கை அமலாக்க துறை நேர்மையாக விசாரிக்கவில்லை. என்னிடம் விசாரிக்காமலேயே என்னை குற்றவாளியாக சித்தரித்துள்ளனர். அமலாக்க துறையின் நடவடிக்கை ஒருதலைபட்சமானது.

கடன் நிலுவை தொடர்பாக வங்கிகள் ஒரு குழுவை அமைத்து பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்.

ஊடகங்கள்எனக்கு எதிரான செய்திகளை பரப்பிவருகின்றன.அவை என்னை குற்றவாளியைபோல் சித்திரிக்கின்றன. ஊடகங்கள் நடுநிலையற்று செயல்படுவது எனக்கு வேதனை அளிக்கிறதுஎன்று கூறியுள்ளார்.