சொற்ப வினாடிகளுக்குள் வீதியில் பிறந்த குழந்தை!

284

1 (73)

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக வீதியில் கடந்த 7ஆம் திகதி பெண் ஒருவர் குழுந்தையை பிரசவித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பெண்ணும், அவரது கணவரும் கொழும்பில் உள்ள வைத்தியரை சந்திப்பதற்காக சிலாபத்திலிருந்து அதிவேகப் பாதையூடாக கொழும்பை நோக்கி வந்துக்கொண்டிருந்த வேளையில் பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்துள்ளது.

இதனால் இவரது கணவர் வாகனத்தை அதிவேகத்துடன் செலுத்தியதால் இவர்களது வாகனம் பழுதடைந்துள்ளது.இதன்போது குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததை அடுத்து கணவர் வாகனத்திலிருந்து இறங்கி அதிவேகப் பாதையில் சென்ற ஏனைய வாகனங்களின் உதவியைக் கோரியுள்ளார்.

எனினும் யாரும் இவர்களுக்கு உதவிக்கு வராத சந்தர்ப்பத்தில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் நிலைமையை புரிந்துக் கொண்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் நோக்குடன் தமது வாகனத்தில் குறித்த பெண்ணையும்,அவரது கணவரையும் ஏற்றியுள்ளனர்.பொலிஸாரின் வாகனத்தில் ஏறிய சொற்ப வினாடிகளுக்குள் அந்தப் பெண் குழுந்தையை பிரசவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பொலிஸார் வாகனத்திலேயே குறித்த பெண்ணை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.