ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி மோசடிகளி ல் ஈடுபட்ட இளைஞர் கைது!!

242

arrest (1)

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை பயன்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டஇளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞர் தான் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிவதாக அடையாளப் படுத்திக்கொண்டு கந்தளாய் பிரதேச இளைஞர்,யுவதிகளிடம் தொழில் பெற்றுத் தருவதாக கூறி140,000 ரூபாய்களை மோசடி செய்துள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர்சாவதிஸ்ஸபுரயை வசிப்பிடமாகக் கொண்ட 26 வயதுடையவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.