வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட மயிலாடி தோட்ட குடியிருப்பில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீட்டிலிருந்த உபகரணங்கள் மற்றும் பல பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.வீட்டில் பரவிய தீயினால் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதேவேளை இது தொடர்பாக வட்டவளை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.அதன்பின் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.