விபத்து – 8 மாதக் குழந்தை உட்பட இருவர் பலி!!

229

?????????????????????????????????????????????????????????

இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை – மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது. முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த, நால்வர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் 8 மாத குழந்தை ஒன்று பலியாகியுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தொடன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பதியத்தலாவ – மஹவெவ வீதியின் புளுன்கஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்று தனது கட்டுப்பாட்டை மீறி, வீதியைவிட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த, மஹஓய – இத்தபொல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் (மோட்டார் சைக்கிள் சாரதி) பதியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.