வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய ஆண், பெண் இருபாலருக்குமான மரதன் ஓட்டப்போட்டி, வேகநடை என்பன நேற்று முன்தினம் (12.06.2016) காலை புதுக்குடியிருப்பு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமாகியது.
வடமாகாண விளையாட்டுத்துறை செயலாளர் திரு.குருபரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் கலந்து கொண்டு போட்டி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.பிரணவநாதன், மற்றும் உத்தியோகத்தர்கள் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.